பாளையில் குண்டர் சட்டத்தில் 26 பேர் கைது-தமிழகத்திலேயே அதிகம்
நெல்லை: தமிழகத்திலேயே அதிகமாக ஓராண்டில் பாளையங்கோட்டை காவல் நிலையம் மூலம் குண்டர் தடுப்பு சட்டத்தில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் மற்றும் இதர காவல் நிலையங்கள் சுமார் 1500 உள்ளன. கடந்த 2010-ம் ஆண்டில் 2200 குண்டர் தடுப்பு சட்ட வழக்குகள் இவற்றில் பதிவாகியுள்ளன.
நெல்லை மாநகர காவல் நிலையங்களான பாளையங்கோட்டையில் 26, மேலப்பாளையத்தில் 14, டவுன் 5, பெருமாள்புரம் 4, ஜங்ஷன் 5, ஜங்ஷன் குற்றப்பிரிவு 3 என மொத்தம் 58 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தி்ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகரத்தில் 250, சென்னை புறநகர் 102, கோவை மாநகரம் 98, புறநகர் 84, ஈரோடு 46, தஞ்சை 43, விழுப்புரம் 46, சேலம் மாநகரம் 58, வேலூர் 45, திண்டுக்கல் 40, ராமநாதபுரம் 45, தேனி 39, நாமக்கல் 37, திருப்பூர் 33, திருவாரூர் 32, நாகப்பட்டினம் 39, புதுக்கோட்டை 45, திருச்சி மாநகரம் 89, திருச்சி புறநகர் 70, விருதுநகர் 36, மதுரை மாநகரம் 75, புறநகர் 45, கன்னியாகுமரி 39, தூத்துக்குடி 42 என மொத்தம் 2200 குண்டர் தடுப்பு சட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன.
இதில் தமிழகத்திலேயே மிக அதிகமாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தினர் தான் 26 பேரை கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications