கோர்ட்டுக்கு வெளியே ஆரூஷியின் தந்தை தாக்கப்பட்டார்
காசியாபாத்: டெல்லியில் கொல்லப்பட்ட ஆரூஷியின் தந்தை ராஜேஷ் தல்வார் நேற்று ஒரு இளைஞரால் காசியாபாத் நீதிமன்றத்திற்கு வெளியே தாக்கப்பட்டார். இதனால் அவர் தலையில் காயம் ஏற்பட்டது.
ஆரூஷி மற்றும் வீட்டு வேலையாள் ஹேம்ராஜ் கொலை தொடர்பாக புதிதாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி மனு கொடுப்பதற்காக தல்வார் (54), நீதிமன்றம் சென்றிருந்தார். அப்போது தான் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது. உடனடியாக அவரது வழக்கறிஞர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதாவது,
தல்வார் மனு தாக்கல் செய்துவிட்டு நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஜெராக்ஸ் கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது 20களில் இருக்கும் ஒரு வாலிபன் அவரை திடீர் என்று வெட்டுகத்தியால் தாக்கினான். இதில் அவரது தலையின் இடப்பக்கத்தில் இருந்து ரத்தம் கொட்டியது.
இதற்கிடையே அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் அந்த இளைஞனைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். பின்னர் போலீசார் அந்த வாலிபனை நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications