ஈழத் தமிழர்களை அழித்த காங்கிரஸுக்கு மன்னிப்பே கிடையாது-வைகோ
புதுச்சேரி: ஈழத் தமிழர்களை அழித்த காங்கிரஸ் கட்சிக்கு மன்னிப்பு கிடையாது. இலங்கை ராணுவம் மிருகத்தை விட கொடூரமானது. தமிழர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். ராஜபக்சே மற்றும் அவரது கூட்டத்தை அழிக்கும் காலம் கட்டாயம் வரும் என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
புதுச்சேரியில் மாநில மதிமுக சார்பில் மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு வைகோ பேசுகையில்,
காமராஜர் முதலமைச்சர் பதவியை விரும்பவில்லை. முதலமைச்சர் பதவி அவரை தேடி வந்தது. முதலமைச்சர் பதவியை தூக்கி எறிந்து விட்டு, மக்களுக்கு பாடுபட சென்றவர். அண்ணா மாதிரி தமிழ்பற்று உடையவர்கள் யாரும் இல்லை. அண்ணா கண்ட கனவை நிறை வேற்ற ம.தி.மு.க. பாடுபட்டு வருகிறது.
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி நல்ல மனிதர். வரும்வழியில் அவரை சந்தித்து விட்டு தான் வருகிறேன் காங்கிரஸ் கட்சி அழிந்து வருகிறது.
ஈழ தமிழர்களை அழித்த காங்கிரஸ் கட்சிக்கு மன்னிப்பு கிடையாது. காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியே வந்த ரங்கசாமியை நான் பாராட்டுகிறேன். அவர் நல்ல முடிவு எடுத்து இருக்கிறார்.
இலங்கை ராணுவம் மிருகத்தை விட கொடூரமானது. தமிழர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். ராஜபக்சே மற்றும் அவனது கூட்டத்தை அழிக்கும் காலம் கட்டாயம் வரும். சுமார் 30 வருடமாக சிங்கள கடற்படை, தமிழக மீனவர்களை தாக்கி வருகிறது. தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. 500 மீனவர்களை கொன்று இருக்கிறது. 1000 பேரை சிங்கள கடற்படை தாக்கி இருக்கிறது.
நமது கடற்படை இதை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறது. பிரபாகரன் போன்று உலகில் எந்த வீரனும் கிடையாது. தரைப்படை, கடற்படை, வான்படை அமைத்து போர் நடத்தியவர் பிரபாகரன். சிங்களம், இந்திய அரசு விடுதலைபுலிகளை அழித்து விட்டோம் என்று நினைக்க வேண்டாம்.
தற்போது முதலமைச்சர் என்பதை விட தி.மு.க. தலைவர் என்ற முடிவிற்கே விரைவில் வருவேன் என்று கருணாநிதி அறிவித்து இருக்கிறார். என்ன அருமையான நாடகம். இது போன்ற விஷயத்தில் அவருக்கு நிகர் அவர் தான். ஒரு மகனுக்கு துணை முதல்வர் பதவி. மற்றொரு மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி. அவர்களது குடும்பம் போன்று யாரும் ஒற்றுமையாக இருக்க முடியாது என்றார் வைகோ.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications