இலவச ஆம்புலன்ஸைப் போல இலவச அமரர் ஊர்தித் திட்டம்
சிதம்பரம்: தமிழகத்தில் 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை செயல்படுவதைப் போல விரைவில் இலவச அமரர் ஊர்தித் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சிதம்பரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசுகையில்,
இளைஞர்கள் எழுச்சியுடனும், மொழி உணர்வுடனும் இருக்க வேண்டும். கருணாநிதி தலைமையிலான ஆட்சியை மீண்டும் கொண்டு வர உறுதி எடுத்து கொள்ள வேண்டும். கருணாநிதி மக்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வகுகிறார்.
108 ஆம்புலனஸ் திட்டம் மூலம் இதுவரை 7 லட்சம் பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. எனவே கருணாநிதியை 6-வது முறையாக முதல்வராக்க வேண்டும். தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் இருக்கும் இடம் தெரியாமல் ஓடிவிடும்.
விரைவில் இலவச அமரர் ஊர்தித் திட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இதன் மூலம் இறந்தவர்களை இலவசமாக மயானத்திற்கு எடுத்துச் செல்ல இந்த ஊர்திகளை அழைக்கலாம். 108 என்று ஆம்புலன்ஸ் சேவைக்கு எண் கொடுக்கப்பட்டிருப்பதைப் போல இந்த அமரர் ஊர்திக்கும் தனியாக ஒரு எண் தரப்படும் என்றார் அமைச்சர்.












Click it and Unblock the Notifications