மீனவர் படுகொலைகளைக் கண்டித்து பிப். 6ல் வைகோ தலைமையில் உண்ணாவிரதம்

இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் அன்றாட நிகழ்ச்சிகள் ஆகிவிட்டன. கடந்த 30 ஆண்டுகளாக, இலங்கைக் கடற்படையினர், சர்வதேச கடல் பரப்பிலும், இந்தியக் கடல் எல்லைக்கு உள்ளேயும் நுழைந்து, அங்கு மீன் பிடிக்கின்ற தமிழக மீனவர்களின் வலைகளை அறுப்பதும், படகுகளை உடைத்து நொறுக்குவதும், தமிழக மீனவர்களின் ஆடைகளைக் களைந்து கடலுக்கு உள்ளே தூக்கி வீசுவதும், சுட்டுக் கொல்வதும் வாடிக்கையாகி விட்டன. கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தச் சம்பவங்கள், வாரம் தவறாமல் நடக்கின்ற கொடுமை ஆகி விட்டது.
இந்தியக் கடற்படையும், கடலோரக் காவல்படையும் வேடிக்கை பார்ப்பது மட்டும் அல்ல, இலங்கைக் கடற்படைக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றன. தமிழக மீனவர்களை ஏமாற்றுகின்ற விதத்தில் முதல்வர் கருணாநிதி, மத்திய அரசுக்குக் கடிதங்கள் எழுதி, கண்துடைப்பு நாடகம் ஆடுகிறார்.
அண்மையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மீனவர் வீரபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார். மீனவர் கண்ணீர் உலர்வதற்கு உள்ளாகவே, புஷ்பவனம் மீனவர் ஜெயக்குமார், இலங்கைக் கடற்படையினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டதும், தமிழக மீனவர்கள் உள்ளத்தில் குமுறலையும், இனி நம் உயிர்களுக்குப் பாதுகாப்பே இல்லை என்கிற கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழக மீனவர்களைப் படுகொலை செய்கின்ற, இலங்கைக் கடற்படையை இயக்கும் சிங்கள அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கவும், இனி தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டால், அதற்கு கடமை தவறும் இந்திய அரசுதான் பொறுப்பாளி ஆகும் என்பதைச் சுட்டிக்காட்டி, மத்திய மாநில அரசுகளுக்குக் கண்டனம் தெரிவிக்கவும், தமிழக மீனவர்களின் துயரத்தில் பங்கு ஏற்கவும், பிப்ரவரி 6 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று, நாகப்பட்டினத்தில், மதிமுக உண்ணாவிரதம் மேற்கொள்கிறது.
பொதுச் செயலாளர் அதற்கு வைகோ தலைமை ஏற்கிறார் என்று அறிக்கை தெரிவிக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications