வாஜ்பாய்க்கு பாரத ரத்னா தர வேண்டும் : பிரிஜேஷ் மிஸ்ரா கோரிக்கை
Subscribe to Oneindia Tamil

முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரிஜேஷ் மிஸ்ராவுக்கு சமீபத்தில் பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. இவர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவர்.
இந்த நிலையில் வாஜ்பாய்க்கு பாரதரத்னா தரப்பட வேண்டும் என்று மிஸ்ரா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
இந்திய அரசியல் வரலாற்றில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பெரும் பங்கு உண்டு. இந்திரா காந்திக்கு அடுத்து மிகச் சிறந்த பிரதமராக இருந்தவர் வாஜ்பாய். பிற அரசியல் தலைவர்கள் எல்லாம் அரசியல்வாதிகளாகவே இருக்க அவர் மட்டும் அரசியல் மேதையாக இருக்கிறார்.
அத்தகைய மனிதருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா 3 ஆண்டுகளுக்கு முன்பே வழங்கி இருக்க வேண்டும். ஆனால் தற்போது தான் அவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications