அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்-நடிகர் கார்த்திக்
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம் என்று நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
அன்மையில் நான் அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவைச் சந்தித்து பேசினேன். அப்போது வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது என்பது முடிவானது.
ஜெயலலிதா ஒதுக்கும் தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுவோம். சிவகாசிக்கு சென்றபோது நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். மக்கள் விரும்பினால் நான் போட்டியிடத் தயார்.
கடந்த 2008-ம் ஆண்டு தான் நாடாளும் மக்கள் கட்சியைத் துவங்கினேன். கடந்த 2 1/2 ஆண்டுகளில் எங்கள் கட்சி நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த தேர்தலின்போது நாங்கள் சார்ந்திருந்த கட்சியினர் சிலரே குளறுபடி செய்தனர். அவர்கள் தற்போது எங்களுடன் இல்லை.
கட்சிக்கு உழைக்கும் உணமையானவர்கள் இருக்கிறார்கள். தேர்தல் பணி மேற்கொள்வதற்கென தனியாக 15 நபர் குழு அமைக்கப்படுகிறது. மக்கள் மத்திய, மாநில அரசுகள் மீது கோபத்தில் உள்ளனர். ஊழல் மலிந்துள்ளது. வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை கொண்டு வர முடியவில்லை. எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications