ஏடிஎம்ல் ரூ. 20 லட்சம் திருடிய கொத்தனார் கைது
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் மதன்னபேட்டையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத்தில் உள்ள ஏடிஎம் எந்திரத்தில் இருந்து ரூ. 20 லட்சம் திருடியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறி்த்து கமிஷனர் ஏ.கே. கான் தெரிவித்ததாவது,
கடந்த ஜனவரி மாதம் 15-ம் தேதி இந்த திருட்டு நடந்துள்ளது. யாதகிரி என்னும் கொத்தனாரை கைது செய்துள்ளோம். அவரிடம் இருந்து ரூ. 6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையின்போது அவர், தனது நண்பருடன் ஏடிஎம் எந்திரத்தை ஸ்க்ரூ டிரைவரால் திறந்து 4 பெட்டிகளில் இருந்த பணத்தை திருடியதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
அவரை சம்பாபேட்டையில் வைத்து கைது செய்தோம். அவரது நண்பரைத் தேடி வருகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications