விலைவாசி உயர்வு குறித்து விவாதம் கோரி அதிமுக, மதிமுக, கம்யூ வெளிநடப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரின. ஆனால் அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் அதிமுக, மதிமுக, இடதுசாரி கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
இன்று சட்டசபைக்கு அதிமுக, மதிமுக, இடதுசாரி உறுப்பினர்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்திருந்தனர். சபை கூடியதும் அனைவரும் எழுந்து நின்று கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று கோரினர்.
ஆனால் இந்தக் கோரிக்கையை ஏற்க சபாநாயகர் ஆவுடையப்பன் மறுத்தார். இதையடுத்து அனைவரும் கோஷமிட்டிபடியே வெளிநடப்புச் செய்வதாக அறிவித்து விட்டு வெளியேறினர்.












Click it and Unblock the Notifications