அரசு அலுவலகத்தில் மது அருந்திய அலுவலர்கள் சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில் பணியின் போது மது அருந்தி பணியாற்றிய மூன்று அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது கீழ்பென்னாத்தூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலகம். இந்த அலுவலகத்தில் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் எஸ்.கோபிதாஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கு பணியில் இருந்த எழுத்தர் குமார், அலுவலக உதவியாளர் ஜெயகுரு சாந்தன், பதிவு எழுத்தர் அருணாச்சலம் ஆகிய மூன்று பேரும் மது மயக்கத்தில் தள்ளாடியபடி பணி செய்து கொண்டு இருந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் கோபிதாஸ், அவர்கள் மூன்று பேர்களை பணி மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

அதன்படி எழுத்தர் குமார் அனக்காவூருக்கும், அலுவலக உதவியாளர் ஜெயகுருசாந்தன் ஆரணிக்கும், பதிவு எழுத்தர் அருணாச்சலம் போளூருக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், உயர் அதிகாரி உத்தரவை செயல்படுத்த மறுத்த அவர்கள் மூன்று பேரையும், மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் கோபிதாஸ் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+