தமிழகத்தில் இன்று மக்கள் தொகை கணக்கெடுப்பு துவக்கம்: பணியில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2011ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டப் பணி இன்று தமிழகத்தில் துவங்கியது.

2011-ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டப் பணி இன்று நாடு முழுவதும் துவங்கியது. தமிழ்நாட்டில் 1 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 9 ஆயிரம் பேர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கணக்கெடுப்பு பணி இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை நடக்கிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாநகராட்சி, நகராடசி பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று கணக்கெடுக்கிறார்கள். அனைத்து தகவல்களையும் பெறுவதற்காக ஒவ்வொருவரிடமும் 29 கேள்விகள் கேட்கப்படுகின்றன.

நபரின் பெயர், குடும்பத்தலைவருக்கு உறவின் முறை, இனம், மதம், பிறந்ததேதி வயதுடன், தற்போதைய திருமண நிலை, திருமணத்தின்போது வயது, மாற்றுத்திறன், தாய்மொழி, அறிந்த பிற மொழிகள், எழுத்தறிவு நிலை, அதிகபட்ச கல்வி நிலை, நபரின் தொழில். தொழில் வியாபாரம் அல்லது வேலையின் தன்மை, பிறந்த இடம், கடைசியாக வசித்த இடம், வேலை தருபவரா? அல்லது வேலை செய்யத் தயாரா? உயிருடன் வாழும் குழந்தைகள், உயிருடன் பிறந்த குழந்தைகள் உள்ளிட்ட 29 கேள்விகள் கேட்கப்பட்டு அவற்றை முறையாக பூர்த்தி செய்யவேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+