ஆருஷி கொலைக்கு பெற்றோர் தான் காரணம் : சிபிஐ நீதிமன்றம் குற்றச்சாட்டு

கடந்த 2008-ம் ஆண்டு மே மாதம் 15-ம் தேதி நள்ளிரவில் தனது வீட்டில் பிணமாகக் கிடந்தார் ஆருஷி. அவர் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. முதலில் ஆருஷியின் தந்தை ராஜேஷ் தல்வார் மீது சந்தேகம் எழுந்தது. பின்னர் வீட்டு வேலையாட்கள் மீது சந்தேகம் எழுந்தது.
ஆனால் இறுதியில் இந்த வழக்கில் போதிய ஆதாரம் கிடைக்கவில்லை என்று கூறி சமீபத்தில் வழக்கை மூட முடிவு செய்த சிபிஐ இதுதொடர்பான அறிக்கையையும் சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆனால் அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் இன்று ஆருஷியின் பெற்றோர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கொலை, சாட்சியங்கள் அழிப்பு, கூட்டுச் சதி உள்ளிட்ட குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரீதி சிங் ஆருஷியின் பெற்றோரை வரும் 28-ம் தேதி ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.
சிபிஐ அறிக்கையை எதிர்த்து ராஜேஷ் தல்வார் தாக்கல் செய்த மனுவை நீதமன்றம் தள்ளுபடி செய்தது. இரண்டு ஆண்டுகளாக இழுத்தடித்த வழக்கில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ராஜேஷ் மற்றும் நுபூர் தல்வார் முழு உண்மையையும் தெரிவித்துள்ளார்களா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இந்த வழக்கு குறித்த உண்மை விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications