For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் தனித்து போட்டி: பொதுச் செயலாளர் மானே

By Siva
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: வரும் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதென்று பகுஜன் சமாஜ் கட்சி முடிவு செய்துள்ளது. இந்த தகவலை அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சுரேஷ் மானே தெரிவித்தார்.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் நடக்கவிருக்கிறது. அனைத்துக் கட்சிகளும் தேர்தல் கூட்டணி அமைப்பதில் முனைப்பாக இருக்கிறது. இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி யாருடனும் கூட்டணியின்றி தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது.

இது குறித்து சுரேஷ் மானே தெரிவித்ததாவது,

நாங்கள் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறோம். இதனால் மொத்தம் 10 சதவீதம் ஓட்டுக்கள் வரை பிரிக்கப்படும். இருந்தபோதிலும் தமிழகத்தில் எங்கள் நிலைபாட்டை நிரூபிக்கும் வகையில் தான் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம் என்றார்.

English summary
Bahujan Samaj party has announced that it will contest alone in all the 234 constituencies in the forthcoming TN assembly polls. The party has taken this decision to show their stand in TN.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X