மகரஜோதி விவகாரம்... 4 வாரங்களுக்குள் பதில் தர கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு!
திருவனந்தபுரம்: சர்ச்சைக்குரிய மகர ஜோதி விவகாரம் குறித்து 4 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி, கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலையில், கடந்த ஜனவரி 14-ந்தேதி மகர ஜோதி தரிசனம் முடிந்ததும் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 102 பக்தர்கள் பலியானார்கள். அதைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய மகர ஜோதி விவகாரம் குறித்து, கேரள உயர்நீதிமன்றத்தில் 3 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
கேரள யுக்திவாடி சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்த விவகாரம் குறித்து நீதிபதி சந்திரசேகர மேனன் கமிஷன் சட்டசபையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையை இந்த நீதிமன்றம் முன்பு சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு உள்ளது.
அகில பாரதீய யுக்திவாடி சங்கம் தனது மனுவில், மகர ஜோதி மனிதர்களால் ஏற்றப்படுவது என்றும், அதற்காக அரசு நிதியைப் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தது.
சபரிமலையின் முன்னாள் மேல்சாந்தி தாக்கல் செய்திருந்த மனுவில், மகரஜோதி மக்களின் நம்பிக்கை தொடர்பான விஷயம் என்பதால் இந்த பிரச்சினையில் யாரும் தலையிடக்கூடாது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
4 வாரங்களுக்குள் பதில்..
நீதிபதிகள் தோத்தாத்தில் பி.ராதாகிருஷ்ணன், எஸ்.சதீஷ் சந்திரன் ஆகியோரைக் கொண்ட கேரள ஐகோர்ட்டு பெஞ்ச் முன்பு இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன.
விசாரணைக்குப்பின், இந்த மனுக்கள் தொடர்பாக தங்கள் கருத்துக்களை 4 வாரங்களுக்குள் கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என்று, மாநில அரசு, தேவசம் போர்டு மற்றும் வனத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
மனிதர்களால் ஏற்றப்படுகிறதா?:
இந்த பிரச்சினையில் சபரிமலை தந்திரியின் கருத்தை பெறும்படியும் தேவசம் போர்டுக்கு உத்தரவிடப்பட்டது. மகரஜோதி, மனிதர்களால் ஏற்றப்படுகிறதா? என்பது குறித்தும், மகர ஜோதிக்கும் மகரவிளக்குக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று அறிந்து கொள்ள விரும்புவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications