மகரஜோதி விவகாரம்... 4 வாரங்களுக்குள் பதில் தர கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு!
திருவனந்தபுரம்: சர்ச்சைக்குரிய மகர ஜோதி விவகாரம் குறித்து 4 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி, கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலையில், கடந்த ஜனவரி 14-ந்தேதி மகர ஜோதி தரிசனம் முடிந்ததும் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 102 பக்தர்கள் பலியானார்கள். அதைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய மகர ஜோதி விவகாரம் குறித்து, கேரள உயர்நீதிமன்றத்தில் 3 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
கேரள யுக்திவாடி சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்த விவகாரம் குறித்து நீதிபதி சந்திரசேகர மேனன் கமிஷன் சட்டசபையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையை இந்த நீதிமன்றம் முன்பு சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு உள்ளது.
அகில பாரதீய யுக்திவாடி சங்கம் தனது மனுவில், மகர ஜோதி மனிதர்களால் ஏற்றப்படுவது என்றும், அதற்காக அரசு நிதியைப் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தது.
சபரிமலையின் முன்னாள் மேல்சாந்தி தாக்கல் செய்திருந்த மனுவில், மகரஜோதி மக்களின் நம்பிக்கை தொடர்பான விஷயம் என்பதால் இந்த பிரச்சினையில் யாரும் தலையிடக்கூடாது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
4 வாரங்களுக்குள் பதில்..
நீதிபதிகள் தோத்தாத்தில் பி.ராதாகிருஷ்ணன், எஸ்.சதீஷ் சந்திரன் ஆகியோரைக் கொண்ட கேரள ஐகோர்ட்டு பெஞ்ச் முன்பு இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன.
விசாரணைக்குப்பின், இந்த மனுக்கள் தொடர்பாக தங்கள் கருத்துக்களை 4 வாரங்களுக்குள் கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என்று, மாநில அரசு, தேவசம் போர்டு மற்றும் வனத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
மனிதர்களால் ஏற்றப்படுகிறதா?:
இந்த பிரச்சினையில் சபரிமலை தந்திரியின் கருத்தை பெறும்படியும் தேவசம் போர்டுக்கு உத்தரவிடப்பட்டது. மகரஜோதி, மனிதர்களால் ஏற்றப்படுகிறதா? என்பது குறித்தும், மகர ஜோதிக்கும் மகரவிளக்குக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று அறிந்து கொள்ள விரும்புவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications