மதுபான உரிமம்-ரூ.36 லட்சம் லஞ்சம் வாங்கினார் உச்சநீதிமன்ற நீதிபதி: கேரள எம்பி
திருவனந்தபுரம்: கேரளாவில் 21 மதுபானக் கூடங்களுக்கு உயர்நீதிமன்றம் விதித்திருந்த தடையை நீக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் 199-ம் ஆண்டு ரூ.36 லட்சம் லஞ்சம் வாங்கிக் கொண்டு, அவர்களுக்கு சாதகமாகத் தீர்ப்பளித்ததாக கேரள மாநில காங்கிரஸ் எம்பி சுதாகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
கண்ணூர் தொகுதி எம்பியான அவர் ஒரு பொது நிகழ்ச்சியில் பேசுகையில் இந்தக் குற்றச்சாட்டைக் கூறினார்.
அவர் கூறுகையில், 21 மதுபானக் கூடங்களுக்கு கேரள உயர்நீதிமன்றம் விதித்திருந்த தடையை நீக்க அந்த உச்சநீதிமன்ற நீதிபதி 1994ம் ஆண்டு ரூ.36 லட்சம் லஞ்சமாகப் பெற்றார்.
அந்தப் பணம் நீதிபதிக்கு 2 தவணைகளாக அளிக்கப்பட்டது. இதை நான் நேரில் பார்த்தேன். எனது இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எதுவும் இல்லை என்றாலும், அந்த நீதிபதியின் பெயரையும் இதர விவரங்களையும் நீதிமன்றத்தில் தெரிவிக்கத் தயார் என்றார்.
இந்தக் குற்றச்சாட்டு மிகத் தீவிரமானது என்றும் இது குறித்து விரிவான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் கேரளத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசும், கேரள பார் கவுன்சிலும் கோரிக்கை விடுத்துள்ளன.












Click it and Unblock the Notifications