சிபிஎஸ்இ : 9ம் வகுப்பு மாணவர்களை பெயிலாக்கக் கூடாது-பள்ளிகளுக்கு உத்தரவு
சென்னை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவர்களை பெயிலாக்காமல் உடனடியாக தேர்வு நடத்தி 10-ம் வகுப்பிற்கு அனுப்புமாறு சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி எம்.சி.சர்மா உத்தரவிட்டுள்ளார்.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவர்கள் ஏராளமானோரை பெயிலாககிவிடுவதாக பெற்றோர்களிடம் இருந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி எம்.சி.சர்மா பள்ளிகளுக்கு அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,
சிபிஎஸ்இ பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை உடல்நலக்குறைவிற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காவோ பெயிலாக்கி விடுகிறார்கள் என்று சில பள்ளிகள் மீது புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
அதனால் அவர்களுக்கு உடனடியாக மறுதேர்வு நடத்த வேண்டும். அவர்கள் ஒரு பாடத்தில் பெயிலாகி இருந்தால் அதற்கு பதிலாக உடனே தேர்வு நடத்த வேண்டும். உடற் பயிற்சி கல்வி, கலை மற்றும் கைவினை பயிற்சி போன்ற பாடங்களில் தேர்வு நடத்தி 10-ம் வகுப்பிறகு அனுப்ப வேண்டும். இந்த மாதம் முதல் இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications