ஆயுதப் போலீசுடன் கடலுக்குச் செல்லுங்கள்! - பழ நெடுமாறன்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச்செல்லும் போது ஆயுதம் ஏந்திய போலீசாரை பாதுகாப்புக்கு உடன் அனுப்ப வேண்டும் என்று பழ.நெடுமாறன் கூறினார்.

உலகத்தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் நேற்று தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "கூட்டணி கட்சிகளின் நிர்ப்பந்தத்தின் பேரில் ராசாவுக்கு தொலைதொடர்பு துறை ஒதுக்க வேண்டி இருந்ததை பிரதமர் ஒப்புக் கொண்டுள்ளார். 1983-ம் ஆண்டில் இருந்தே மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டு வருகின்றனர்.

சிங்கள கடற்படையினரின் இடைவிடாத தாக்குதலுக்கு ஆளாகி இதுவரை 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள��ளனர். மத்திய- மாநில அரசுகளில் ஆளும் கட்சியாக உள்ள தி.மு.க. மீனவர்கள் பிரச்சினைக்காக தமிழகத்தில் போராட்டம் நடத்துவது கேலி கூத்தாக உள்ளது.

மத்தியிலே பதவி வகிக்கும் தி.மு.க. அமைச்சர்கள் அமைச்சரவை கூட்டத்தில் மீனவர்கள் பிரச்சினையை எழுப்பி பாதுகாப்பு கொடுக்க அடியோடு தவறிய கடற்படைக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்து இருக்க வேண்டும்.

தமிழக மீனவர்களை பாதுகாக்க கருணாநிதி தவறிவிட்டார். 1971-ல் கிழக்கு வங்க மக்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் தாக்கப்பட்ட போது மேற்கு வங்கத்தில் முதல்-அமைச்சராக இருந்த காங்கிரசை சேர்ந்த சித்தார்த்தசங்கரே மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். இதனால் அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கும் ராணுவத்தை அனுப்பி கிழக்கு வங்க மக்களை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

எனவே முதல்வர் கருணாநிதி வெறும் நாடக போராட்டங்களை நடத்தாமல் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும் போது அவர்களுடன் ஆயுதம் ஏந்திய போலீஸ் படையை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்...", என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+