லிபியாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு திட்டம்

லிபியாவில் தற்போது 18 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அனைவரும் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளி முருகையா பாண்டியன் என்பவர் கலவரத்தில் கொல்லப்பட்டுள்ளார். அசோக் குமார் என்பவர் காயமடைந்துள்ளார்.
இந்த நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு யோசிக்க ஆரம்பித்துள்ளது. முதல் கட்டமாக திரிபோலிக்கு சிறப்பு விமானத்தை அனுப்பி இந்தியர்களை மீட்க அனுமதி கோரி லிபிய அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளதாம். ஆனால் இதுவரை பதில் ஏதும் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், லிபியாவுக்கு அருகே நிலை கொண்டுள்ள ஒரு தனியார் கப்பலையும் தயார் நிலையில் இருக்குமாறு இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அந்தக் கப்பலில் 1000 பேர் வரை ஏற்றிக் கொண்டு வர முடியுமாம்.
அதேசமயம், திரிபோலிக்கும், பெங்க்சாய் நகருக்கும் இடையே கப்பல்களை இயக்கி அதன் மூலம் இந்தியர்களை, எகிப்தின் அலெக்சான்ட்ரியா நகருக்குக் கொண்டு செல்லும் திட்டத்தையும் இந்தியா பரிசீலித்து வருகிறது. அலெக்சான்டிரியாவிலிருந்து சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அவர்களை அழைத்து வர இந்த வாய்ப்பு பரிசீலிக்கப்படுகிறது. மேலும், தயார் நிலையில் சில விமானங்களை வைத்திருக்குமாறு ஏர் இந்தியாவையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், லிபியாவிலிருந்து மீட்கப்படும் இந்தியர்களிடம் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது என்றும் மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. எகிப்தில் இதேபோல மக்கள் போராட்டம் வெடித்தபோது அங்கிருந்து தாயகம் செல்ல விரும்பிய இந்தியர்களிடம் தாறுமாறாக ஏர் இந்தியா நிறுவனம் பணம் கறந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது நினைவிருக்கலாம்.
லிபியாவிலிருந்து இந்தியர்களை மீட்கும் திட்டத்தை ஓரிரு நாளில் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
வீடு வீடாக புகுந்து கொல்வோம்-கடாபி எச்சரிக்கை
இதற்கிடையே, தனக்கு எதிராக போராடுபவர்களை வீடு வீடாக புகுந்து பிடித்துக் கொல்லுமாறு லிபிய அதிபர் கடாபி தனது ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். தனக்கு எதிராக போராடுபவர்களுக்கு எதிராக அனைத்து ஆதரவாளர்களும் ஒன்று திரளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு எதிரான இந்த போராட்டம் வெளிநாடுகளின், குறிப்பாக மேற்கத்திய நாடுகளின் சதியாகும். இதை முறியடிக்காமல் ஓய மாட்டேன். செத்தாலும் தியாகியாகத்தான் சாவேன். வீடு வீடாக புகுந்து போராட்டக்காரர்களை கொல்லவும் தயங்க மாட்டேன் என்று உறுமியுள்ஏளார்.
எகிப்து, சூடான் ஆகிய நாடுகளில் தொடங்கிய இந்த மக்கள் புரட்சி அரபு நாடுகளான லிபியா, ஏமன், பஹ்ரைன், ஈரான் என தொடர்ந்து வருவதால் அரபு நாடுகள் பெரும் கலக்கமடைந்துள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications