முருகையா பாண்டியன் கொல்லப்படவில்லை, விபத்தில் இறந்தார்-மத்திய அரசு

முருகையா பாண்டியன் லிபியாவில் நடந்த கலவரத்தின்போது கலவரக்காரர்களால் கொல்லப்பட்டதாகவும், அசோக் குமார் என்பவர் படுகாயமடைந்திருப்பதாகவும் அங்கிருந்து தங்களுக்குத் தகவல் வந்ததாக முருகையா பாண்டியனின் குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சகம் இதற்கு நேர்மாறான விளக்கத்தை அளித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள செய்தியில், திரிபோலியில் உள்ள இந்தியத் தூதரகம் சேகரித்த தகவலின்படி, கடந்த சனிக்கிழமை இரவு, முருகையா பாண்டியன் உள்ளிட்ட 3 இந்தியர்கள் (நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்), 2 எகிப்தியர்கள், கார் மூலம் டோபிரக் என்ற பகுதியிலிருந்து எகிப்துக்கு தப்பிச் செல்ல பயணித்துள்ளனர்.
அப்போது அவர்களது கார் விபத்துக்குள்ளானது. இதில் 3 இந்தியர்களும் படுகாயமடைந்தனர். மூவரையும் டோபிரக் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதில் முருகையா பாண்டியன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
எனவே முருகையா பாண்டியன் கொல்லப்பட்டதாக வெளியான தகவல் சரியானதல்ல என்று தெரிவிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications