வல்வெட்டித்துறையில் பார்வதி அம்மாள் உடல் தகனம் செய்யப்பட்டது
வல்வெட்டித்துறை மறைந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் உடல் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது.
வல்வெட்டித்துரை அருகே உள்ள ஊரணி இடுகாட்டில் உடல் தகனம் நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டனர்.
ஈழத்தில் நடந்து வந்த போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து முகாம் ஒன்றில் தஞ்சமடைந்திருந்த பிரபாகரனின் பெற்றோர் வேலுப்பிள்ளையும், பார்வதி அம்மாளும் ராணுவத்தால் பிடிக்கப்பட்டு தனிமைச் சிறையில் வைக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து இருவரையும் ராணுவம் விடுவித்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மரணமடைந்தார் வேலுப்பிள்ளை. அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அவரது பிள்ளைகள் யாராலும் வர முடியாத அவலம் ஏற்பட்டது.
அதன் பின்னர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த பார்வதி அம்மாளை சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வி்மானத்திலிருந்து இறங்கக் கூட அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி தனது 'மனிதாபிமானத்தை' காட்டிக் கொண்டது மத்திய அரசு.
அதன் பிறகு ஏகப்பட்ட கண்டிஷன்களைப் போட்டு சிகிச்சைக்கு வரலாம் என்று மத்திய அரசும், அதை சுட்டிக் காட்டி தமிழக அரசும் பார்வதி அம்மாளுக்கு அழைப்பு விடுத்தன. ஆனால் அவர் வர விரும்பவில்லை.
தொடர்ந்து வல்வெட்டித்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு அருகில் குடும்பத்தினர் யாரும் இல்லாத நிலை ஏற்பட்டதால் உறவினரான சிவாஜிலிங்கம்தான் உடன் இருந்து கவனித்து வந்தார்.
இந்த நிலையில், 20ம் தேதி அதிகாலையில் பார்வதி அம்மாள் மரணமடைந்தார். 81 வயதான அவரது உடல் தகனம் நேற்று நடந்தது. ஊரணி மயானத்தில் இந்த இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். உறவினர் சங்கரநாராயணன் என்பவர் இறுதிச் சடங்குகளை செய்தார்.
இறுதி அஞ்சலி செலுத்த வந்த தமிழர்களைக் கூட ராணுவத்தினர் தீவிரமாக கண்காணித்தனர். அவர்களை வீடியோவில் படம் பிடித்தனர். இதைக் கண்டு தமிழர்கள் மனம் வெதும்பியபடி சென்றனர்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications