சங்கரராமன் கொலை வழக்கு: 4 நீதிபதிகளிடம் இன்று விசாரணை

Subscribe to Oneindia Tamil

Jayendra Saraswati
புதுச்சேரி: புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்து வரும் சங்கரராமன் கொலை வழக்கில் இன்று 4 நீதிபதிகளிடம் விசாரணை நடக்கவுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்தக் கொலை வழக்கு தொடர்பாக சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் மற்றும் அப்பு, ரவிசுப்பிரமணியன் உள்ளிட்ட 25 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் ரவிசுப்பிரமணியன் அப்ரூவரானார். ஆனால், பின்னர் ரவிசுப்பிரமணியன் பல்டி அடித்து பிறழ் சாட்சியம் அளித்தார்.

இந்த வழக்கு நேற்றும் முன் தினமும் மீண்டும் நீதிபதி ராமசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பு வழக்கறிஞர் தேவதாஸ் 5 சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்தார்.

இதுவரை 154 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 75 சாட்சிகள் பல்டி அடித்து பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.

இந்த வழக்கில் இன்றும், நாளையும் வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து விசாரணை நடைபெறும்.

இதில் சங்கரராமன் கொலை வழக்குத் தொடர்பாக ஏற்கெனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் விசாரணை நடத்திய நீதிபதிகள் 4 பேரிடமும் இன்று விசாரணை நடத்தப்படவுள்ளது.

இதைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த போலீஸாரிடமும் விசாரணை நடத்தப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+