கேரள ரேசன் கடைகளில் ரூ.2க்கு ஒரு கிலோ அரிசி : முதல்வர் அச்சுதானந்தன் அறிவிப்பு
திருவனந்தபுரம்: கேராளவில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் ஒரு கிலோ அரிசி ரூ.2க்கு வழங்கப்படும் என சட்டசபையில் முதல்வர் அச்சுதானந்தன் நேற்று தெரிவித்தார்.
கேரளாவில் வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், வேலை உறுதி திட்ட உறுப்பினர்கள் ஆகியோருக்கு மட்டும் ரேஷனில் ரூ.2க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை போன்று ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் ரூ.2க்கு அரிசி வழங்க வேண்டுமேன கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கிடையே தமிழகத்தில் ரேஷனில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாயாக குறைக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் முதல்வர் அச்சுதானந்தன் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ரேஷனில் எல்லோருக்கும் கிலோ அரிசி ரூ.2க்கு வழங்கும் திட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இதை முதல்வர் அச்சுதானந்தன் சட்டசபையில் நேற்று அறிவித்தார்.
கேரளாவில் இனிமேல் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் ரூ.2க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படும் என்று அறிவித்தார். ஏற்கனவே உள்ளபடி வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதம் 25 கிலோவும், வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு மாதம் 12 கிலோ அரிசியும் வழங்கப்படு்ம் என்றும், இந்த திட்டத்தால் சுமார் 70 லட்சம் பேர் பயனடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications