பாலக்கோட்டில் நாளை அதிமுக போராட்டம்!
சென்னை: தி.மு.க. அரசைக் கண்டித்து தர்மபுரி மாவட்ட அதிமுக சார்பில் நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணிக்கு பாலக்கோடு பேருந்து நிலையம் எம்.ஜி.ஆர். சிலை அருகில் கண்டனப் போராட்டம் நடைபெறும் என, ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாசன வசதி மற்றும் குடிநீர் வசதி பெறும் வகையில் நான்கு திட்டங்கள் தீட்டப்பட்டு, அதில் கிருஷ்ணகிரி வலதுபுறக் கால்வாயை நீட்டித்து 34 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் எனது ஆட்சிக் காலத்திலேயே முடிக்கப்பட்டது.
ஆட்சி மாற்றத்தின் காரணமாக மற்ற மூன்று திட்டங்களை செயல்படுத்த முடியாமல் போய்விட்டது. தி.மு.க. அரசு, கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் பாப்பாரப்பட்டி ஏரி திட்டத்திற்கு மட்டும் தான் நிதி ஒதுக்கீடு செய்தது.
மற்ற இரண்டு திட்டங்களான பஞ்சப்பள்ளி சின்னாறு அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை எரணஹள்ளி ஏரி, புலிக்கரை ஏரி போன்ற 14 ஏரிகளுக்கு எடுத்துச் செல்லும் திட்டம் மற்றும் செங்கன்பஸ்தலாவ் ஏரியிலிருந்து தண்டுகரண ஹள்ளி, கொண்டசாமனல் ஏரி போன்ற 10 ஏரிகளுக்குக் கொண்டு செல்லும் திட்டம் ஆகியவற்றை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கழகத்தின் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆகவே, தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி சின்னாறு அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை கால்வாய் மூலம் 24 ஏரிகளுக்குக் கொண்டு செல்லும் இரு திட்டங்களை கிடப்பில் போட்டுள்ள தி.மு.க. அரசைக் கண்டித்து நாளை தர்மபுரி மாவட்டக் கழகத்தின் சார்பில், நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணி அளவில், பாலக்கோடு பேருந்து நிலையம் எம்.ஜி.ஆர். சிலை அருகில் மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை, எம்.பி., தலைமையிலும், தருமபுரி மாவட்டக் கழகச் செயலாளர் கே.பி. அன்பழகன், எம்.எல்.ஏ., முன்னிலையிலும் நடைபெறும்.
-இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்!












Click it and Unblock the Notifications