2ஜி ஒதுக்கீடு: முக்கிய ஆவணங்கள் மாயம், சிபிஐ கண்காணிப்பில் 63 பேர்

2ஜி ஊழல் விவகாரத்தில் கைதான மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெகுரா தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று சிபிஐ நீதிமன்றத்தில் நடந்தது. அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து சிபிஐ தரப்பில் கூறுகையில், 2ஜி ஸ்பெக்டரம் உரிமம் பெற்ற குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் ஆவணங்கள் மட்டும் திடீர் என்று காணாமல் போய்விட்டன. அந்நிறுவனம் தொலைத்தொடர்புத் துறையில் தாக்கல் செய்த முக்கிய ஆவணங்களை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் சில முக்கிய ஆவணங்களும் மாயமாகியுள்ளன.
ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு உரிமம் வழங்கப்பட்டதில் விதி மீறல்கள் நடந்துள்ளன. இந்த விஷயத்தில் ஆ. ராசாவும், பெகுரியாவும் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
இந்நிலையில் சித்தார்த் பெகுரியாவை ஜாமீனில் விடுவித்தால் அவர் சாட்சியங்களையும், ஆவணங்களையும் அழித்து விடுவார் என்று கூறப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஓ.பி.சைனி விசாரணையை வரும் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
சிபிஐ கண்காணிப்பில் 63 பேர்:
இந் நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் 10 தொலைத்தொடர்பு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட 63 பேரை கண்காணித்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி அடங்கிய பெஞ்சிடம் சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கூறுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணையில் சிபிஐயின் கண்காணிப்பின்கீழ் 10 நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் அவற்றின் அதிபர்கள் உள்ளிட்ட 63 பேர் உள்ளனர் என்றார்.
இதையடுத்து வரும் 10ம் தேதிக்குள் சிபிஐயும், அமலாக்கத் துறையும் தங்களது விசாரணை அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications