ஜெயலலிதா போன் ஒட்டு கேட்கப்படுவதாக நாடாளுமன்றத்தில் அதிமுக அமளி-ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் போனை தமிழக அரசு ஒட்டுக் கேட்பதாக இன்று நாடாளுமன்றத்தில் அக்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
இன்று நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர் தம்பித்துரை ஜெயலலிதாவின் தொலைபேசியை தமிழக அரசு ஒட்டுக் கேட்கிறது என்று புகார் தெரிவித்தார். இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பதிலளிக்க வேண்டும் என்றும், மேலும் இது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதையடுத்து மற்ற அதிமுக உறுப்பினர்கள் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
ராஜ்யசபாவிலும் இதே போன்று பல பிரச்சனைகள் கிளப்பப்பட்டதால் அங்கும் சபை ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications