பாமகவில் இன்று முதல் விருப்பமனு வினியோகம்-ஜி.கே.மணி
தைலாபுரம்: வரும் சட்டசபை தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனு இன்று முதல் தொடங்கியது.
முன்னதாக இது குறித்து பாமக தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டிருந்த அறிக்கையில்,
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 13-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் பாமக போட்டியிடுகின்றது.
இந்த நிலையில், பாமக சார்பில் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்காக தைலாபுரம் தோட்டத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் விண்ணப்பம் வினியோகம் செய்யப்படுகின்றது.
இதற்கென உரிய படிவத்தை பெற்று அதை முழுமையாக பூர்த்தி செய்து தொகுதிக்கு ரூ. 10 ஆயிரம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மார்ச் 7 ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
இவ்வாறு ஜி.கே. மணி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.