செரீனா வில்லியம்ஸுக்கு நுரையீரலில் ரத்தக் கட்டி: மருத்துவமனையில் அனுமதி

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த எல்டன் ஜான் எய்ட்ல் பவுன்டேஷன் அகாடெமி விருது விழாவில் செரீனா கலந்து கொண்டார். அதில் அவர் வழக்கம் போல அசத்தலாகக் காணப்பட்டார்.
இந்த நிலையில், கடந்த வாரம் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள செடார்ஸ்-சினாய் மெடிக்கல் சென்டருக்கு செரீனா அடிக்கடி வந்து போயுள்ளார். அப்போது நடந்த பரிசோதனைகளின்போதுதான் அவரது நுரையீரலில் ரத்தக் கட்டி ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் அவரது உடல் நிலைமை இந்த வாரம் மோசமானது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து செரீனாவின் பிரநிதி கூறியதாவது,
செரீனா ரத்தக் கட்டி ஏற்பட்டதற்காக செடார்ஸில் அவசர சிகிச்சை பெற்றார். இது அவர் இன்னும் மோசமான நிலையில் இருக்கையில் எடுத்துக் கொண்ட சிகிச்சையினால் உருவாகியுள்ளது.
கடந்த வாரம், சொரீனாவின் நுரையீரலில் ரத்தக் கட்டி இருந்தது லாஸ் ஏஞ்சல்ஸ் வந்த பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கால் சம்பந்தமான பிரச்சனைக்காக நியூயார்கில் இருந்தார். அவர் தற்போது மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார் என்றார்.
செரீனாவுக்கு அறுவைச் சிகிச்சை செய்து ரத்தக் கட்டியை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications