For Daily Alerts
Just In
இலங்கையில் நகை திருடியதாக 2 இந்தியர்கள் கைது: ரூ.9 லட்சம் நகை பறிமுதல்
கொழும்பு: இலங்கையில் சாமியார் வேஷம் போட்டு ரூ. 9 லட்சம் மதிப்புள்ள நகைகளைத் திருடியதாக 2 இந்தியர்களை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.
24 மற்றும் 25 மதிக்கத்தக்க அந்த 2 இந்தியர்கள் தங்களை சாமியார் என்று கூறிக் கொண்டு இலங்கையில் சில வீடுகளில் பூஜைகள் நடத்தி வந்திருக்கின்றனர். அதில் ஒரு வீட்டின் உரிமையளர் நகைகளை காணவில்லை என்று வட கொழும்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீசார் அந்த 2 இளைஞர்களிடம் விசாரணை நடத்தி அவர்களிடம் இருந்த ரூ. 9 லட்சம் மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்தனர்.
அவர்கள் இருவரையும் இன்று ஹல்ப்ட்ஸ்டார்பில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர். இந்த தகவலை போலீசார் தெரிவித்தனர்.
Comments
English summary
2 Indians calling themselves as Hindu priests in Sri Lanka were detained by the police for stealing jewellery. Jewellery worth Rs. 9 lakh confiscated from them. The two performed poojas in houses there when one house owner complained of jewels missing. Police investigated the two aged 24, 25 and found the jewels.
Story first published: Thursday, March 3, 2011, 16:43 [IST]