இலங்கையில் நகை திருடியதாக 2 இந்தியர்கள் கைது: ரூ.9 லட்சம் நகை பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையில் சாமியார் வேஷம் போட்டு ரூ. 9 லட்சம் மதிப்புள்ள நகைகளைத் திருடியதாக 2 இந்தியர்களை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.
24 மற்றும் 25 மதிக்கத்தக்க அந்த 2 இந்தியர்கள் தங்களை சாமியார் என்று கூறிக் கொண்டு இலங்கையில் சில வீடுகளில் பூஜைகள் நடத்தி வந்திருக்கின்றனர். அதில் ஒரு வீட்டின் உரிமையளர் நகைகளை காணவில்லை என்று வட கொழும்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீசார் அந்த 2 இளைஞர்களிடம் விசாரணை நடத்தி அவர்களிடம் இருந்த ரூ. 9 லட்சம் மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்தனர்.
அவர்கள் இருவரையும் இன்று ஹல்ப்ட்ஸ்டார்பில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர். இந்த தகவலை போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications