சட்டசபை தேர்தலன்று 8-ம் வகுப்பு பொது தேர்வுகள்: குழப்பத்தில் மாணவர்கள்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: தமிழகத்தில் ஓட்டுப் பதிவு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஏப்ரல் மாதம் 13-ம் தேதியன்று 8ம் வகுப்பு தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் மாணவர்கள் பெரும் குழப்பமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 13-ம் தேதி நடக்கிறது. மாவட்ட அளவில் 8-ம் வகுப்பு தேர்வுகள் பொதுவான முறையில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகள் வரும் ஏப்ரல் மாதம் 11-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடப்பதாக அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் ஏப்ரல் மாதம் 13-ம் தேதி ஓட்டுபதிவு நடப்பதால் இத்தேர்வுகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஓட்டுபதிவுக்கு முன்தினம் பல்வேறு பள்ளிகளில் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்பதால் அந்த நாளிலும் நடக்கும் தேர்வுகள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தேர்தலுக்கு முன்பாக தேர்வுகள் நடத்தபடுமா அல்லது தேர்தலுக்கு பின் தேர்வுகள் நடத்தப்படுமா என்பது தொடர்பாக ஆசிரியர்கள், மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கல்வி துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+