சட்டசபைத் தேர்தல் தேதியை மாற்ற இயலாது-தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு

தமிழகம், புதுவை, கேரளா ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாகவும், அஸ்ஸாமில் 2 கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் வரலாறு காணாத வகையில் 6 கட்டங்களாகவும் சட்டசபைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
அதேசமயம், வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதிதான் நடைபெறுகிறது. இதனால், தமிழகம், புதுவை, கேரளாவில் வாக்குப் பதிவு முடிந்து முடிவை அறிய ஒரு மாதம் காத்திருக்க வேண்டியுள்ளது.
இந்த தேர்தல் அட்டவணை தமிழகத்தில் பல்வேறு கட்சிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் கருணாநிதி பகிரங்கமாகவே தேர்தல் ஆணையத்தை கடுமையாக கண்டித்துள்ளார். மேலும், அதிமுக, மதிமுக, பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும் தேர்தல் தேதியை மாற்றக் கோரியுள்ளன.
அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷிக்கு கடிதம் மூலம் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
ஆனால் தேர்தல் தேதியை மாற்ற முடியாது என்று இன்று குரேஷி அறிவித்து விட்டார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஐந்து மாநிலங்களிலும் நடைபெறும் பொதுத் தேர்வுகள், திருவிழாக்கள் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டே, அவற்றை முறையாக பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட பின்னரே தேர்தல் தேதிகள் முடிவு செய்யப்பட்டன.
தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்தல் தேதியை மாற்றக்கோரி அதிமுகவிடமிருந்து மட்டுமே கடிதம் வந்தது. வேறு எந்த கடிதமும் வரவில்லை என்றார்.
'சத்தம் போடாமல் பிரசாரம் செய்ய வேண்டியதுதான்'
பத்து மற்றும் பிளஸ்டூ தேர்வு சமயத்தில் தேர்தல் நடப்பதால் மாணவர்களின் படிப்பு பாதிக்குமே என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அப்படி என்றால் வேட்பாளர்கள் அதிக சத்தம் இல்லாமல், சத்தமின்றி பிரசாரம் செய்ய வேண்டும். அதிக ஓசையின்றி பிரசாரம் செய்தால் மாணவர்களின் படிப்புக்கு குந்தகம் ஏற்படாது என்றார் குரேஷி.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications