வாக்காளர்கள் ஓட்டுப் போட்டு கேமரா முன்பு பெயரைச் சொல்லும் முறை அமல்!
திருச்சி: பதட்டமான வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் ஓட்டுப் போட்டு விட்டு, அங்கு வைக்கப்பட்டுள்ள கேமரா முன்பு நின்று தங்களது பெயரைச் சொல்லிச் செல்லும் புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சித் தலைவருமான மகேசன் காசிராஜன் அகூறுகையில், பதட்டமான வாக்குச் சாவடிகளில் ஒரு புதிய முறையை தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தவுள்ளது.
அதன்படி, பதட்டமான வாக்குச் சாவடிகளில் வெப் காமராக்கள் பொருத்தப்படும். அங்கு வாக்களிக்க வரும் வாக்காளர்கள், ஓட்டுப் போட்ட பின்னர் கேமராவுக்கு முன்பு நின்று தங்களது பெயரைச் சொல்ல வேண்டும். அதாவது, என் பெயர் மணி என்று சொல்ல வேண்டும்.
ஆள் மாறாட்டத்தைத் தடுக்கும் வகையில் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. நாளைக்கு, வாக்காளர்கள் தங்களது வாக்கை வேறு யாரோ போட்டு விட்டார்கள் என்று சொல்லி விடக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு என்றார்.












Click it and Unblock the Notifications