மாணவர்களைப் பாதிக்கும் சட்டசபைத் தேர்தல் தேதியை மாற்றக் கோரி வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பத்து மற்றும் பிளஸ்டூ மாணவர்களின் நலன் கருதி சட்டசபைத் தேர்தல் தேதியை மாற்றியமைக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குரு அப்பாசாமி என்பவர் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொது நலன் மனுவில், தற்போது பிளஸ்டூ தேர்வு நடந்து வருகிறது. அடுத்து பத்தாம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கவுள்ளன.

இந்தநிலையில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 13ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இப்படி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் பிரசாரத்தால் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்டூ மாணவர்கள் படிப்பு கடுமையாக பாதிக்கப்படும்.

எனவே சட்டசபைத் தேர்தல் தேதியை மாற்றியமைக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+