திமுகவின் அதிரடி முடிவால் சரிந்த பங்குச் சந்தை... 331 புள்ளிகள் வீழ்ச்சி!!
Subscribe to Oneindia Tamil

காலையில் வர்த்தகம் துவங்கியதுமே புள்ளிகள் மளமளவென சரிந்தது. 331 புள்ளிகளை இழந்துள்ளது மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ்.
திமுக - காங்கிரஸ் பிளவு நிரந்தரம் என்பது உறுதியானால் இன்னும் சில நூறு புள்ளிகள் சரியும் என்கிறார்கள் நிபுணர்கள். திமுகவின் இந்த முடிவு, அரசியல் ஸ்திரமின்மைக்கு அடிகோலியுள்ளதால், முதலீட்டாளர்கள் மளமளவென்று தங்களிடம் உள்ள பங்குகளை தள்ளிவிட முயன்றதுதான் இந்த சரிவுக்குக் காரணம் என்கிறார்கள்.
இப்போதைய நிலவரப்படி 331 புள்ளிகளை இழந்து 18,155.39 ஆக உள்ளது சென்செக்ஸ். தேசிய பங்குச் சந்தை நிப்டி 100 புள்ளிகளை இழந்து 5,438.45-ல் ஊசலாடிக் கொண்டுள்ளது.
மாலைக்குள் ஏற்படும் அரசியல் மாறுதல்களைப் பொறுத்த இந்த சரிவு மீட்சி பெறும் அல்லது அதிகரிக்கும் சூழல் உள்ளது.












Click it and Unblock the Notifications