பி.ஜே.தாமஸ் நியமனத்தை ரத்து செய்தார் குடியரசுத் தலைவர்
டெல்லி உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்தை சம்பாதித்த ஊழல் கண்காணிப்பு தலைமை ஆணையர் பதவி நியமனத்தை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ரத்து செய்தார். இதன் மூலம் பி.ஜே.தாமஸின் நியமனம் ரத்தாகியுள்ளது.
கேரளாவில் பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கில்சிக்கியவர் தாமஸ். இவரை ஊழல் கண்காணிப்பு ஆணைய தலைமை ஆணையராக நியமித்தது மத்திய அரசு. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது மத்திய அரசுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்தது உச்சநீதிமன்றம். இருந்தும், தாமஸை நீக்கும் முயற்சிகளை எடுக்காமல் இருந்து வந்தது மத்திய அரசு.
இந்த நிலையில் தாமஸ் நியமனம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து தாமஸ் நியமனத்தை ரத்து செய்து நேற்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உத்தரவிட்டார். இதையடுத்து புதிய தலைமை ஆணையரை மத்திய அரசு தேர்வு செய்ய வேண்டும்.












Click it and Unblock the Notifications