நெல்லையில் அதிமுக, திமுக சார்பில் துணை வேந்தர்கள் போட்டியா?
நெல்லை: தமிழக சட்டபேரவை தேர்தலில், நெல்லையில் அதிமுக, திமுக சார்பி்ல் முன்னாள் துணை வேந்தர்கள் போட்டியிடுவார்கள் என பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
பட்டமளிப்பு விழாவில் மாலை ராஜா எம்எல்ஏ-வால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நெல்லை அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் காளியப்பன் விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது அதிமுகவில் ஐக்கியமாகி சீட் கேட்டு விருப்ப மனுவும் தாக்கல் செய்துள்ளார். இவருக்கு அதிமுகவில் ஒரு தொகுதி உறுதியாக வழங்கப்பட உள்ளதாகவும், நெல்லை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
அதேசமயம் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பணியில் இருந்து ஓய்வு பெறப்போகும் சபாபதி மோகனுக்கு திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக அனுதாபியாக இருக்கும் சபாபதிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கட்சி பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர். மொத்தத்தில் நெல்லையில் தேர்தல் களம் தற்போதுதான் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications