For Daily Alerts
Just In
கோவில்பட்டி அதிமுக வேட்பாளரை எதிர்த்து தட்டி போர்டு வைத்து போராட்டம்
கயத்தாறு: கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளரை எதிர்த்து கயத்தாறில் வைக்கப்பட்டுள்ள தட்டி போர்டால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு்ள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கோவில்பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜூக்கு சீட் வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கயத்தாறு பழைய பஸ் நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த தட்டிபோர்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில் நியாயம்தானா? 4-8-90 அன்று கடம்பூர் மெயின் பஜாரில் அம்மாவின் கொடும்பாவியை எரி்த்தவர் அதிமுக வேட்பாளரா?. இதை தொண்டர்கள் ஏற்று கொள்வார்களா? நீதி கேட்கிறோம்! என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. ஆனால் அதை வைத்தது யார் என்ற விபரம் தெரியவில்லை.
Comments
English summary
ADMK cadres in Kovilpatti are up in arms against patry candidate Kadambur Raju. They charged that Raju once burnt Jaya's effigy. But the party has given ticket to him, they fumed.
Story first published: Saturday, March 19, 2011, 13:42 [IST]