வரலாறு காணாத தேர்தல் கெடுபிடி-தமிழகத்திற்கு வரும் 30 வெளிமாநில ஐஜிக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இதுவரைஇல்லாத அளவுக்கு தமிழக சட்டசபைத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் அதிகமாகி வருகின்றன. தமிழக தேர்தல் அதிகாரிகளைக் கண்காணிப்பதற்காக 30 வெளி மாநில ஐஜிக்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இவர்கள்ஓரிரு நாட்களில் தமிழகம் வரவுள்ளனர்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் கடும் விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அமலாக்கி வருகிறது. இதுகுறித்து முதல்வர் கருணாநிதி முதல் பல்வேறு கட்சிகளும் கண்டனம், எதிர்ப்பு, அதிருப்தி தெரிவித்துள்ளன. உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இருப்பினும் தான் செய்வது சரியே என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறி விட்டது.

இந்த நிலையில் அடுத்த அதிரடியாக தமிழக தேர்தல் அதிகாரிகளின் பணிகளைக் கண்காணிக்கவும், தேர்தல் நடத்தை விதி மீறல்களைக் கண்காணிக்கவும் 30 வெளிமாநில காவல்துறை ஐஜிக்களை தமிழகத்திற்கு அனுப்புகிறது தேர்தல் ஆணையம்.

இவர்கள் தேர்தல் அதிகாரிகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து தேர்தல் ஆணையத்திற்கு அவ்வப்போது அறிக்கை அளிப்பார்கள். தேர்தல் நடத்தை விதிமுறையின் கீழ் இந்த நியமனத்தை செய்துள்ளது தேர்தல் ஆணையம். இவர்கள் ஓரிரு நாட்களில் தமிழகத்திற்கு வரவுள்ளனர்.

ஏற்கனவே சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலத்திற்குரிய ஐஜிக்கள் வந்து விட்டனர். மற்றவர்களும் விரைவில் வரவுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+