துணை முதல்வர் பதவி கோர மாட்டேன்: விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: என்னை கண்டு கருணாநிதிக்கு பயம் வந்து விட்டது. அதனால் தான் என்னை பின் தொடர்ந்து 'வேட்பாளரை அடிச்சான், கொடியை இறக்கச் சொன்னான், வாந்தி எடுத்தான்' என்று தப்புத் தப்பா நியூஸ் போட வைக்கிறார்,'' என்றார் விஜயகாந்த்.

திருச்சி வந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ஸ்ரீரங்கத்தில் போட்டியிடும் ஜெயலலிதா, திருவெறும்பூர் செந்தில்குமார், மண்ணச்சநல்லூர் பூனாச்சி, முசிறி சிவபதி ஆகியோரை ஆதரித்து ஓட்டு சேகரித்தார்.

இந்த இடங்களில் விஜயகாந்த் பேசியதாவது:

"பால் உற்பத்தியாளர்களுக்கு விலையை உயர்த்தி தரவேண்டும். குறைந்த விலையில் பால் விற்பனை செய்ய வேண்டும்' என்று மூன்றாண்டுக்கு முன் நான் கூறினேன். ஆனால், இப்போதுதான் கருணாநிதி பால் உற்பத்தியாளர்களுக்கு விலை உயர்த்தி தருவதாக அறிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. டில்லிக்கு பலமுறை சென்ற கருணாநிதி, பெட்ரோல் விலை உயர்வு குறித்து வாய்திறந்திருப்பாரா? 5 ஆண்டுக்கு முன், 33.55 ரூபாயாக இருந்த பெட்ரோல் இன்று, 63 ரூபாய்க்கு விற்கிறது.

அனைத்து தொழில்களும் இழுத்து மூடப்பட்டுவிட்டன. எப்போது பார்த்தாலும் 'கரன்ட் கட்'. கலர், கலராக டிக்கெட்டை கொடுத்து பஸ் கட்டணத்தை மறைமுகமாக உயர்த்தியுள்ளனர். தவறு செய்தால் யாரையும் விடமாட்டேன். கருணாநிதி, தன் பிள்ளைகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், ஒன்றியம், வார்டு, வட்ட செயலர் வரை அனைவரையும் தவறு செய்யும்படி கூறுகிறார். எங்கும், எதிலும் ஊழல், லஞ்சம் தலை விரித்தாடுகிறது.

ஆமா.. அடிச்சேன்!

எனது கட்சி வேட்பாளரை அடித்ததாக, டிவியில் அடிக்கடி ஒளிபரப்புகின்றனர்.

ஆமா... நான் என் கட்சிக்காரரை தானே அடிச்சேன்; உங்களையா அடிச்சேன்? கூட்டத்துக்கு வரும் தொண்டர்களை கொடியை கீழே இறக்கச் சொல்கிறார் என்கின்றனர். பின்னால் நிற்கும் மக்கள் என்னை பார்க்க முடியாது என்பதால், கொடியை கீழே இறக்கும்படி கூறுகிறேன். இதை ஏதோ தவறுபோல், சித்தரித்து டிவிக்களில் ஒளிபரப்புகின்றனர்.

இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்...? என்னைப் பார்த்து கருணாநிதிக்கு பயம் வந்துவிட்டது. அதனால்தான் என்னை பின் தொடர்கின்றனர். தவறான செய்திகளைப் பரப்புகின்றனர்.

விஜயகாந்த் வேட்பாளரை அடிச்சான்; கொடியை இறக்கச் சொன்னான்; வாந்தி எடுத்தான்... இன்னும் என்ன வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள். என்னைப் பற்றி என் தொண்டர்களுக்கும், மக்களுக்கும் தெரியும்.

சாலையில் ஒருவர் நடந்து செல்கிறார். அப்போது, அவர் திடீரென மயங்கி விழுகிறார். உடனடியாக என்ன செய்ய வேண்டும்? அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து, சோடா கொடுத்து அவரை மீட்க வேண்டும். அதுபோல், தமிழகத்தை மீட்க கருணாநிதியை ஆட்சியிலிருந்து துரத்துவது தான் தமிழகத்தின் உடனடி தேவை. இவ்வாறு விஜயகாந்த் பேசினார்...", என்றார்.

ஈரோட்டில்...

பின்னர் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்த விஜயகாந்த் கூறுகையில், "
தமிழக முதல்வர் கருணாநிதிக்கு விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவை எல்லாம் பிரச்சனையாக தெரியவில்லை. இப்போதைக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குதான் பிரச்சனை. கருணாநிதிக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. இந்த சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனித்து நிற்க வேண்டும். மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்க வேண்டும் என எத்தனையோ வேலைகளை செய்தார். அதற்காக உளவுத்துறையையும் பயன்படுத்தினார்.

கோவையில் கருணாநிதி பேசியபோது மீண்டும் முதல்வரானால் பால் கொள்முதலுக்கு மானியம் வழங்குவேன் என்று கூறியுள்ளார். 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு இதை செய்ய முடியவில்லையா? ஈரோட்டில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அத்திக் கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றுவேன் என வாக்குறுதி அளித்தார்.

திருப்பூர் சாயப்பட்டறை பிரச்சனை கருணாநிதி தன் கனவிலும் நனவிலும் உறுத்திக் கொண்டு இருக்கிறது என்றார். ஆனால் அந்த தொழிலை நம்பி இருக்கும் மக்களுக்கு என்ன செய்தார்? தற்போது ஏழைகளுக்கு இலவசம் தொடரும் என்று கூறியுள்ளார். மக்களே உங்களிடம் நான் ஒன்று சொல்கிறேன்.

கருணாநிதி ஆட்சி திரும்பவும் வராமல் இருப்பதற்கு எந்த தியாகமும் செய்வேன்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் முத்துச்சாமி பற்றி எனக்கு நன்றாக தெரியும். 5 நிமிடத்திற்கு ஒரு முறை புத்தி மாறக்கூடியவர். வீண் கவுரவத்திற்கு மக்கள் ஓட்டு போட மாட்டாரர்கள்.

எம்.ஜி.ஆர். போட்ட பிச்சையில் வந்தவர் முத்துச்சாமி. எம்.ஜி.ஆர்.அவரை அறிமுகப்படுத்தினார். அ.தி.மு.க. வில் பணம் சம்பாதித்து விட்டு தற்போது தி.மு.க.வில் சேர்ந்து விட்டார். எம்.ஜி.ஆருக்கு துரோகம் செய்துவிட்டார். எனவே சந்திரகுமாருக்கு வாக்களியுங்கள். அ.தி.மு.க. கூட்டணியை வெற்றிபெறச் செய்யுங்கள்.

துணை முதல்வர் பதவி கோர மாட்டேன்:

வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால் துணை முதல்வர் பதவியை கோர மாட்டேன் என்றார்.

எம்ஜிஆர் மாதிரிதான் நானும்...

நாமக்கல் மாவட்டத்தில் விஜயகாந்த் பேசுகையில், "விஜயகாந்துக்கு கோபம் வந்துவிட்டது. எனவே அடித்துவிட்டார் என சில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி வருகிறார்கள். நான் எனது ஆளை அடித்தால் உங்களுக்கு என்ன? எனது மானசீக குருவான எம்.ஜி.ஆரே "ஒரு தவறு செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்" என்று கூறியுள்ளார். அந்த வகையில் எங்கு தவறு நடந்தாலும் அங்கு நான் தோன்றுவேன். அதே வகையில் தான் எம்.ஜி.ஆர். கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளேன்.

இந்த கூட்டணி அமைவதற்கு முன் விஜயகாந்த் அத்தனை கோடி வாங்கி விட்டார், இத்தனை கோடி வாங்கிவிட்டார் என என்ன வெல்லாமோ புரளியை கிளப்பிவிட்டனர். என்னை தனியாக போட்டியிட வைத்து அழிக்க பல திட்டங்கள் போட்டார். அது நடக்கவில்லை.

நான் இப்படியே ஓடிவிட மாட்டேன். மீண்டும் வருவேன். உங்களிடம் என்ன குறைகள் உள்ளது என கேட்பேன். எனவே இந்த தேர்தலில் புதிய நபர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என கேட்கிறேன்", என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+