For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாசில்தாரை தாக்கிய வழக்கில் மு.க. அழகிரி, 3 திமுகவினருக்கு முன்ஜாமீன்

By Siva
Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் தாசில்தார் தாக்கப்பட்ட வழக்கில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி முன் ஜாமீன் பெற்றார்.

மதுரை அருகே உள்ள மேலூரில் தாசில்தாரை தாக்கிய விவகாரத்தில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று மதுரையே நேற்று மாலை முதல் பரபரப்பாய் காணப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை முதல் வேலையாக மு.க. அழகிரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் முன் ஜாமீன் வழங்கக்கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அவரது மனுவை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. முன்னதாக இதே வழக்கில் தொடர்புடைய 3 திமுகவினர் நேற்று முன் ஜாமீன் பெற்றனர்.

English summary
Madurai HC has given anticipatory bail to central minister MK Azhagiri in Tahsildar assault case today. Earlier 3 DMK partymen who have connection with the same got bail yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X