தாசில்தாரை தாக்கிய வழக்கில் மு.க. அழகிரி, 3 திமுகவினருக்கு முன்ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் தாசில்தார் தாக்கப்பட்ட வழக்கில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி முன் ஜாமீன் பெற்றார்.
மதுரை அருகே உள்ள மேலூரில் தாசில்தாரை தாக்கிய விவகாரத்தில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று மதுரையே நேற்று மாலை முதல் பரபரப்பாய் காணப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை முதல் வேலையாக மு.க. அழகிரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் முன் ஜாமீன் வழங்கக்கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அவரது மனுவை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. முன்னதாக இதே வழக்கில் தொடர்புடைய 3 திமுகவினர் நேற்று முன் ஜாமீன் பெற்றனர்.












Click it and Unblock the Notifications