தூத்துக்குடியில் மாமியாரை எரித்துக் கொலை செய்த மருமகன் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மாமியாரை எரித்துக் கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி சங்கர் காலனியைச் சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மனைவி தங்கஈஸ்வரி (45). இவர்களது மகள் திவ்யா( 24).
இதே பகுதியைச் சேர்ந்த பொன்ராஜ் மகன் மாரிமுத்துவிற்கும் (32), திவ்யாவுக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
ஆனால் மாரிமுத்துவிற்கும், மாமியார் தங்க ஈஸ்வரியின் உறவினர் பெண்ணிற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் கணவரைப் பிரிந்து திவ்யா தனது தாய் வீட்டிற்குச் சென்றார்.
இந்த நிலையில் மாமியார் வீட்டுக்குச் சென்ற மாரிமுத்து, மனைவி திவ்யாவை தன்னுடன் வரும்படி அழைத்துள்ளார். இதற்கு அவர் வரமறுக்கவே, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த மாரிமுத்து மாமியார் தங்க ஈஸ்வரியைப் பார்த்து, 'நீ தான் அனைத்திற்கும் காரணம்' எனக் கூறி அவர் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்தார். இதில் பலத்த காயமடைந்த தங்க ஈஸ்வரி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதனையடுத்து மாரிமுத்துவை தென்பாகம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications