அரசுத் திட்டங்களால் பலன் பெற்றது கருணாநிதி குடும்பம்தான்! - ஜெ
நாமக்கல்: திமுக அரசின் நலத் திட்டங்களால் கருணாநிதி குடும்பத்தினர்தான் பலன் பெற்றுள்ளனர் என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.
நாமக்கல் மாவட்டத்துக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய ஜெயலலிதா, பரமத்தி -கோட்டை சாலை சந்திப்பில் அதிமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், "கடந்த முறை ஆட்சிக்கு வந்த கருணாநிதி, ஏழை மக்களுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்குவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால், அவர் கூறியதுபோல் எந்தவொரு ஏழைக்கும் நிலம் வழங்கப்படவில்லை. அதற்குப் பதில் திமுக கட்சியினரால் அவர்களது நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் 1.62 கோடி வண்ணத்தொலைக்காட்சி பெட்டிகள் இலவசமாக வழங்கியதாகக் கூறி கருணாநிதி பிரசாரம் செய்து வருகிறார். ஆனால், அந்தத் தொலைக்காட்சி பெட்டிகள் வாங்க செலவிடப்பட்ட பணம் மக்களது வரிப் பணம் என்பதை மறைந்துவிடக் கூடாது.
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு கடத்தப்படும் ரேஷன் அரிசியின் அளவு பன்மடங்கு அதிகரித்துவிட்டது. இந்தத் திட்டம் ஏழை மக்களுக்கு பயன்படுவதற்குப் பதில் அரிசி கடத்தல்காரர்கள் பணக்காரர்களாகவே பெரிதும் பயன்பட்டிருக்கிறது.
காப்பீட்டுத் திட்டத்தில் கமிஷன்:
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதாக திமுக கூறி வருகிறது. ஆனால், அந்தத் திட்டத்தை செயல்படுத்தும் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து முறைகேடாக முறையில் ஆளுங்கட்சியினரால் ரூ. 600 கோடிக்கு மேல் கமிஷன் பெறப்பட்டுள்ளது. மேலும், இத் திட்டத்தின் மூலம் மஞ்சள் காமாலை, சிக்கன்குனியா போன்ற நோய்களுக்கு சிகிச்சை பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
கான்கிரீட் வீடுகளைக் கட்டும் திட்டத்தால் மக்கள் கடனாளியானதுதான் மிச்சம். கருணாநிதி குடும்பத்தினர் சிமெண்ட் ஆலை, இரும்பு தொழிற்சாலைகளை நிர்வகித்து வருகின்றனர். கட்டுமானப் பொருள்களுக்கு செயற்கை முறையில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அவற்றின் விலையை பன்மடங்கு உயர்த்தி அவர்கள் கொள்ளை லாபம் சம்பாதித்துவிடுகின்றனர்.
அதேபோல், 108 ஆம்புலன்ஸ் என்பது மத்திய அரசின் திட்டம். ஆனால், அதை தான்தான் கொண்டு வந்ததாக கருணாநிதி கூறி வருகிறார். இந்த ஆம்புலன்ஸ் திட்டத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் தங்களது குடும்ப தொலைக்காட்சியில் விளம்பரம் செய்து அதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாயை சம்பாதித்துவிட்டனர்.
மர்ம மரணங்களை விசாரியுங்கள்...
வெளிநாட்டவர்களே கண்டு வியக்கும் வண்ணம் விஞ்ஞான ரீதியில் ஸ்பெக்ட்ரம் ஊழல் நடைபெற்றுள்ளது. இந்த ஊழலில் தொடர்புடையவரும், மத்திய தொலைத்தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவின் நெருங்கிய கூட்டாளியுமான சாதிக் பாட்சா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்நிலையில், ராசாவின் உறவினரான தீபக் என்பவரும் மர்மமான முறையில் இறந்துவிட்டார்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்ந்து மர்மமான முறையில் இறப்பதுக்கு பின்புலம் உள்ள உண்மை விசாரிக்கப்பட வேண்டும். சமீபத்தில் ஆம்னி பஸ்ஸில் இருந்து வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த பணம் தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தப் பணம் ஸ்ரீரங்கம் தொகுதியில் விநியோகிப்பதற்காகக் கடத்தப்பட்டது என தெரியவந்துள்ளது.
கருணாநிதி குடும்பத்தினர், சொந்தமாக விமான நிறுவனம் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் தென்காசி அருகே பண மூட்டைகளை வீசிவிட்டு சென்றதாகத் தகவல் தெரிகிறது. தனது குடும்ப உறுப்பினர்கள் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்பதற்காகவே பல திட்டங்கள் கொண்டு வருகிறார் கருணாநிதி.
பொருளாதார நிலை சீரழிந்து விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது. மின்வெட்டு, நிலமோசடி, ரவுடிஸம் ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றவும் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் தேர்தலில் ஆதரவு அளிக்க வேண்டும்.
அதிமுக ஆட்சிக்கு வந்தால் நாமக்கல்லில் கோழிப் பண்ணை, லாரி தொழில் சிறப்பான வளர்ச்சி அடைய தேவையான திட்டங்கள் தீட்டப்படும். ஓட்டுநர் உரிமம் பெற குறைந்தபட்ச கல்வி தகுதி 8-ம் வகுப்பு என்ற விதியை திருத்தி, எழுதப்படிக்கத் தெரிந்தவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.
கொல்லிமலைக்கு மாற்றுப் பாதை அமைக்கும் பணியைத் துரிதப்படுத்தவும், நாமக்கல்லில் இருந்து ராசிபுரத்துக்கு ரிங் சாலை அமைக்கவும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்," என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications