சென்னை: தமிழகத்தில் மாற்றம் வர வேண்டும் என்று கோரி சில எப்.எம். ரேடியோக்கள் மற்றும் எஸ்.எம்.எஸ்கள் மூலம் நடந்து வரும் பிரசார செய்திகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை திமுக வலியுறுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையம் இதைச் செய்வது போன்ற தோற்றத்தை அதிமுக ஏற்படுத்தி வருவதாகவும் அது குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி, தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் ஆகியோருக்கு திமுக சட்டக் குழுத் தலைவர் பொன்.முத்துராமலிங்கம் அனுப்பியுள்ள புகாரில் கூறியிருப்பதாவது...
சில எப்.எம். சானல்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் மூலம் மாற்றம் ஏற்படுத்த ஏப்ரல் 13ம் தேதியன்று வாக்களியுங்கள் என்று செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இவற்றை தேர்தல் ஆணையம்தான் செய்வது போல எதிர்க்கட்சிகள் குறிப்பாக அதிமுக தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதன் மூலம் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிகள் நடக்கின்றன. இது வாக்காளர்களிடையே தவறான கருத்தை ஏற்படுத்தும். எனவே இவற்றை உடனடியாக தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது..
DMK today asked the Election Commission to stop messages aired by some FM radio channels and SMS doing rounds to vote for a 'change' in the April 13 Tamil Nadu Assembly polls, saying opposition has created an impression that it was being done at the behest of the EC. "Opposition parties are creating an impression among voters that such activities are being done at the behest of the EC," the DMK said in a complaint to Chief Election Commissioner S Y Quaraishi and state Chief Electoral Officer Praveen Kumar. DMK said this was "sending out a wrong message" to voters and the EC should order a stop to the campaign.