சச்சினுக்கு பாரதரத்னா விருது கொடுப்பதில் புதுச் சிக்கல்

Subscribe to Oneindia Tamil

Sachin Tendulkar
டெல்லி: சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும் என்று நாடு முழுவதும் குரல்கள் வலுத்து வரும் நிலையில் அந்த விருதை சச்சினால் வாங்கவே முடியாது என்கிறார் அரசியல் சாசன சட்ட நிபுணர் சுபாஷ் காஷ்யப் என்பவர்.

ஒரு வேளை சச்சினுக்கு விருது கொடுத்தே ஆக வேண்டும் என்று மத்திய அரசு நினைத்தால், விருது பெறத் தகுதிடையவர்களுக்காக அரசு நிர்ணயித்துள்ள தற்போதைய விதிமுறைகளை மாற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

1954ம் ஆண்டு பாரதரத்னா விருது ஏற்படுத்தப்பட்டது. அதுமுதல் இதுவரை 41 பிரபலங்கள் இந்த விருதினைப் பெற்றுள்ளனர். இருப்பினும் இவர்களில் ஒருவர் கூட விளையாட்டுத்துறையைச் சேர்ந்தவர் கிடையாது. காரணம், விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு விருதை அளிக்க முடியாது. அப்படி உள்ளன விருது பெறத் தகுதி உடையவர்களுக்கான விதிமுறைகள்.

இதுகுறித்து காஷ்யப் கூறுகையில், சச்சின் டெண்டுல்கர் பாரத ரத்னா விருது பெற தகுதி பெற முடியாது. காரணம், தற்போதைய விதிமுறைகள் அதைத் தடை செய்வதாக உள்ளது. அவருக்கு விருது கொடுத்தே தீர வேண்டும் என்றால் விதிமுறைகளை முதலில் மாற்றியாக வேண்டும். அப்போதுதான்
சச்சினால் விருதைப் பெற முடியும்.

தற்போதைய விதிமுறைப்படி இலக்கியம், அறிவியல், கலை, சமூக சேவை ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பாரதரத்னா விருது தர முடியும். அதில் விளையாட்டு இடம் பெறவில்லை என்றார் காஷ்யப்.

எனவே தற்போதைய விதிமுறைப்படி பார்த்தால், சச்சினுக்கு பாரதரத்னா விருது கிடைக்க வாய்ப்பில்லை. இருப்பினும் சச்சினுக்காக விதிமுறையைத் தளர்த்தி விளையாட்டுத்துறையையும் அதில் சேர்க்க மத்திய அரசு சேர்க்கலாம் என்று கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+