ஊழலுக்கு எதிராக தீவிரமாக போராட வேண்டியுள்ளது-ஹஸாரா

இதுதொடர்பாக அவர் கூறுகையில், லோக்பால் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது என்பது மிகப் பெரிய போராட்டமாக இருக்கும் என்று கருதுகிறோம். இதற்காக இன்னும் போராட வேண்டியுள்ளது. இன்னும் பல போராட்டங்களுக்கு நாங்கள் திட்டமிட்டு வருகிறோம்.
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இப்போதே சிந்திக்க ஆரம்பித்து விட்டோம். இப்போது நாம் வென்றிருப்பது சிறிய அளவிலான போராட்டம்தான். சமூகத்தின் அனைத்து மட்டத்திலிருந்தும் ஊழலை ஒழித்தால்தான் முழுமையான போராட்டத்தை நாம் முடிக்க முடியும்.
தற்போது சட்ட மசோதா தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள கமிட்டியில் தந்தை, மகனான சாந்தி பூஷனும், பிரஷாந்த் பூஷனும் இடம் பெற்றிருப்பது குறித்து பாபா ராம்தேவ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தனி நபர்களை விட வல்லுநர்கள் குழுவில்இடம் பெறுவதுதான் இப்போதைக்கு முக்கியம். அப்போதுதான் வலுவான சட்டத்தை நம்மால் உருவாக்க முடியும். வலிமையான சட்டம் ஏற்படுத்தப்பட்டால்தான் லோக்பால் சட்டத்தை திறம்பட அமலாக்க முடியும்.
கிரண் பேடி ஏன் குழுவில் இடம் பெறவில்லை என்பதற்கும் எனது பதில் இதுதான். தனி நபர்கள் இப்போது முக்கியமில்லை. சட்ட வல்லுநர்கள்தான் அவசியம் என்றார் ஹஸாரே.












Click it and Unblock the Notifications