சட்டசபைத் தேர்தலில் அதிமுக அமோக தோல்வி அடையும்-கார்த்திக்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் கார்த்திக் பேசியபோது கூறுகையில்,
கூட்டணிக் கட்சிகளுக்கு அதிமுக துரோகம் செய்துவிட்டது. நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர்களை கடத்தி, சதி செய்த அதிமுக மீது நடவடிக்கை எடுக்காமல், அதிமுகவுக்கு அதரவாக தேர்தல் ஆணையம் நடந்து கொள்கிறது.
கூட்டணிக் கட்சிகளுக்கு மிகப்பெரிய துரோகம் செய்த அதிமுக சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும்.
பொதுமக்கள் மத்தியில் அதிமுகவுக்கு வெறுப்பு வந்துள்ளது. வாக்குகள் அதிமுகவுக்கு விழாது. அதிமுகவுக்கு வெற்றியே கிடையாது. திமுக கூட்டணியே வெற்றி பெறும் என்றார் அவர்.
இந்த சட்டசபைத் தேர்தலில் வேட்பாளர்களை தனித்து நிறுத்திய கார்த்திக் கடைசி வரை பிரசாரம் செய்யவே இல்லை என்பதும், செய்தியாளர்களை மட்டுமே சந்தித்துப் பேசி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications