நடேசன், புலித்தேவனை உயிருடன் கொளுத்திய சிங்கள ராணுவம்! - பகீர் ஆதாரங்கள்

Subscribe to Oneindia Tamil

Natesan and Pulithevan
கொழும்பு: 2009 மே மாதம் இறுதி யுத்தத்தின்போது ராணுத்திடம் சரணடைந்த புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் மற்றும் சமாதான செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் ஆகியோர் உயிருடன் கொளுத்தப்பட்டதற்கான புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

இறுதி யுத்தத்தின் கடைசி நாளில் இவர்கள் சரணடையலாம் எனவும், சரணடைவதற்கு ஏதுவான சூழ் நிலையை தாம் தோற்றுவித்துள்ளதாகவும், அதற்கு பொறுப்போற்றிருந்த இந்திய, நார்வே மற்றும் ஐ.நா அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோர் உறுதியாகத் தெரிவித்திருந்தனர். அதன் பிறகுதான் அரசியல்துறைப் பொறுப்பாளர் ப.நடேசனும் புலித்தேவனும் சரணடைந்தனர்.

ஆனால் இருவரையும், கட்டிவைத்து இராணுவத்தினர் மனிதர்கள் நினைத்துப்பார்க்க முடியாத அளவு சித்திரவதைகளை மேற்கொண்ட பின்னரே கொலை செய்துள்ளனர் என்பது இப்போது தெரியவந்துள்ளது.

முதலில் ப.நடேசனின் மனைவி விஜிதா கொலை செய்யப்பட்டதாகவும், பின்னர் கடும் சித்திரவதைகளின் பின்னர் அவர்களின் அடிவயிற்றில் நெருப்பால் சுட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் அவர்களை இராணுவம் கட்டிவைத்து கொடுமைசெய்த காயங்கள் அவர் உடலில் காணப்படுகிறன. இதற்கான புதிய புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

கொல்லப்பட்ட பிறகு அவர்களின் உடல்களை எடுத்துச் சென்று புதைக்க இருந்த இடத்தில் நின்ற இராணுவத்தினரால் இப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+