மதுரையில் வாக்காளர்களுக்கு தாம்பூல வரவேற்பளித்த 5 திமுகவினர் கைது
Subscribe to Oneindia Tamil
மதுரை: மோலூரில் வாக்களிக்க வந்தவர்களை தாம்பூலம் வைத்து வரவேற்ற 5 திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அண்ணா காலனி அருகே அமைந்துள்ள வாக்குச்சாவடிக்கு வந்தவர்களை 5 திமுகவினர் தாம்பூலம் வைத்து வரவேற்றனர். இதைப் பார்த்த அதிமுகவினர் உடனே இது குறித்து போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் அந்த 5 திமுகவினரையும் கைது செய்தனர்.
கள்ள ஓட்டு போட முயன்ற 10 பேர் கைது
சென்னையில் விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட நெசப்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் 2 பேர் இறந்தவர்கள் பெயரில் ஓட்டு போட முயன்றனர். மேலும் 8 பேர் கள்ள ஓட்டு போட முயற்சி செய்துள்ளனர். இவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications