தேர்தலையொட்டி 2 நாட்களில் ரூ.142 கோடிக்கு மது விற்பனை: பீர் விற்பனை அமோகம்
சென்னை: தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் இரண்டே நாட்களில் ரூ.142 கோடிக்கு மது விற்பனையானது.
தேர்தலையொட்டி கடந்த 11-ம் தேதி மாலை 5 மணி முதல் இன்று நள்ளிரவு வரை அனைத்து மதுக்கடைகளையும் மூடுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவைக் கேட்டதுடன் குடிமுகன்கள் போட்டிப்போட்டுக் கொண்டு டாஸ்மாக் கடைகளில் குவந்தனர்.
முண்டியடித்துக் கொண்டு வந்த கூட்டத்தை சமாளி்கக முடியாமல் டாஸ்மாக் ஊழியர்கள் திணறினர். அவரவர் சக்தி்க்கேற்ப மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் அமோக விற்பனை நடந்தது.
கடந்த 10-ம் தேதி ரூ.77 கோடியே 50 லட்சத்திற்கும், 11-ம் தேதி ரூ.64 கோடியே 50 லட்சத்திற்கு மது விற்பனையானது. இரண்டே நாட்களில் மொத்தம் ரூ. 142 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது. குடிமகன்கள் ஏராளமானோர் நிறைய பீர் பாட்டில்கள் வாங்கிச் சென்றனர்.












Click it and Unblock the Notifications