தமிழகத்தில் பல இடங்களில் மின்வெட்டு-திமுக மீது அதிருப்தியை ஏற்படுத்த சதி?
சென்னை: மின்வெட்டு அமல்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தபோதிலும் தமிழகத்தின் பல இடங்களில் இன்று மின்வெட்டு ஏற்பட்டது. திமுக அரசு மீது அதிருப்தியை ஏற்படுத்த நடத்தப்படும் சதி இது என்று திமுகவினர் குற்றம் சாட்டினர்.
தேர்தல் நடைபெறும் சமயத்தில் தமிழகம் முழுவதும் மின்சாரம் தடைபடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இதுதொடர்பாக மின்வாரியத்திற்கும் அது உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் சென்னையில் பல இடங்களில் இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் மின்சாரம் ரத்தானது. இதனால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
ஆனால் இது சிலரின் சதி வேலை என்று திமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர். திமுக அரசு மீது அதிருப்தியை ஏற்படுத்துவதற்காக சிலர் சதி செய்து வேண்டும் என்றே மின்சாரத்தை ரத்து செய்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
மின்வெட்டு ஏற்பட்டால் உடனடியாக அதை சரி செய்வதை உறுதி செய்ய அதிகாரிகள் குழுவையும் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications