வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் தாசில்தார் மீது 1000 வாக்காளர்கள் தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூர் மாவட்டம் தேவானம்பட்டினத்தில் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் காணாததால் ஆத்திரமடைந்த 1000 வாக்காளர்கள் தாசில்தாரை முற்றுகையிட்டு அவரை அடித்து அறையில் பூட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தேவானம்பட்டினத்தைச் சேர்ந்த வாக்குச் சாவடிக்குச் சென்ற கிட்டத்தட்ட 1000 வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் அவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து ஆயிரம் பேரும் வாக்குச் சாவடியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து அங்கு தாசில்தார் அசோகன் வந்தார். அவர் மக்களை சமாதானப்படுத்தினார். ஆனால் அவரைப் பார்த்து கொந்தளித்த வாக்காளர்கள் சரமாரியாக அவரை அடித்து உதைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அசோகனை அறையில் வைத்துப் பூட்டி போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். அந்த இடத்திற்குக் கூடுதல் போலீஸார் விரைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+